உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கு எதிரான கடும் தடையாணை மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்

President Donald Trump speaks at his Mar-a-Lago club, Saturday, Jan. 3, 2026, in Palm Beach, Fla., as Defense Secretary Pete Hegseth listens.AP/PTI(AP01_03_2026_000396B)

வாஷிங்டன், ஜனவரி 8 (ஏபி):

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பால் தொடங்கிய போரைக் முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கக் கூடிய கடும் தடையாணை மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம், இந்த மசோதாவுக்கு அதிபர் “பச்சை விளக்கு” அளித்ததாக கூறினார்.

இந்த தடையாணை சட்டத்திற்கு டிரம்ப் ஆதரவு அளிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஏபிக்கு உறுதிப்படுத்தினார்.

“உக்ரைன் அமைதிக்காக சமரசம் செய்ய தயாராக உள்ளது. ஆனால் புதின் பேச்சில் மட்டுமே இருக்கிறார்; நிரபராத மக்களின் உயிரிழப்பு தொடர்கிறது,” என்று கிரஹாம் கூறினார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, யுரேனியம் வாங்கும் நாடுகளுக்கு சுங்கவரி மற்றும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது.

இந்த மசோதாவுக்கு செனட்டில் பரவலான ஆதரவு உள்ளதுடன், பிரதிநிதிகள் சபையிலும் இணை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(ஏபி)