
புதுதில்லி, ஜனவரி 7 (பிடிஐ)
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பான சமூக ஊடக பதிவுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாட்டுப்புறப் பாடகி நெஹா சிங் ரதோருக்கு கைது செய்யப்படுவதிலிருந்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால பாதுகாப்பு வழங்கியது.
ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவை குறிவைத்து கருத்துகள் வெளியிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் அடங்கிய அமர்வு, உத்தரப்பிரதேச அரசு மற்றும் புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பி, ரதோருக்கு எதிராக எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
ஏப்ரல் 27 அன்று லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
