
ஐக்கிய நாடுகள், ஜனவரி 4 (பிடிஐ): அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் “ஆபத்தான முன்னுதாரணம்” ஆகும் என்று அவர் கூறினார்.
வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை பிராந்தியத்தில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவின் நிலைமையைப் பொருட்படுத்தாமல், சர்வதேச சட்டங்களும் ஐநா சாசனமும் மதிக்கப்படவில்லை என குட்டேரஸ் கூறினார்.
