பாலஸ்தீன் விவகாரத்தில் இரு-நாடு தீர்வுக்கு இந்தியா மற்றும் அரபு லீக் நாடுகள் ஆதரவு

**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Jan. 31, 2026, Prime Minister Narendra Modi, centre, poses for pictures with the Foreign Ministers and delegations of the Arab League, in New Delhi. Union Foreign Affairs Minister S Jaishankar, left, and National Security Advisor Ajit Doval, right, are also seen. (@narendramodi/X via PTI Photo)(PTI01_31_2026_000361B)

புது டெல்லி, பிப்ரவரி 1 (பிடிஐ): இந்தியா மற்றும் அரபு லீக் நாடுகள் சனிக்கிழமை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு விரிவான நோக்கத்தை முன்வைத்தன. இஸ்ரேலுடன் அமைதியாக இணைந்து வாழக்கூடிய சுயாதீனமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற பாலஸ்தீன் நாடு அவசியம் என இரு தரப்பும் வலியுறுத்தின. ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச உறவுகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டன.

இரண்டாவது இந்தியா–அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதம் கடுமையாக கண்டிக்கப்பட்டது. தீவிரவாதத்தை ஒற்றுமையாக எதிர்க்க, தீவிரவாத கட்டமைப்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை அகற்ற, குற்றவாளிகளை தாமதமின்றி நீதிக்கு கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியா நடத்திய இந்த கூட்டத்தில் அரபு லீக்கின் 19 உறுப்புநாடுகள் பங்கேற்றன.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இணைந்த முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. பஹல்காமில் நிரபராத இந்தியர்களை குறிவைத்து நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.