75 நாடுகளின் குடிமக்களுக்கான குடியேற்ற விசா செயல்முறையை அமெரிக்கா நிறுத்தியது

Represenataive Image

நியூயார்க்/வாஷிங்டன், ஜனவரி 15 (பிடிஐ)

பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளின் குடிமக்களுக்கான குடியேற்ற (இமிக்ரண்ட்) விசா செயல்முறையை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது. அமெரிக்காவில் அரசு நலத்திட்டங்களின் மீது சார்ந்திருக்கும் வாய்ப்பு உள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய குடியேற்றர்கள் அமெரிக்க மக்களுக்கு பொருளாதார சுமையாக மாறமாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என்று அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.