
மனிலா, நவ 6 (ஏபி): இந்த ஆண்டில் நாட்டை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாக கருதப்படும் கல்மேகி புயல் மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணங்களில் குறைந்தது 241 பேரை பலி கொண்டதையடுத்து, ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வியாழக்கிழமை அவசர நிலையை அறிவித்தார்.
கல்மேகி புயலில் குறைந்தது 114 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலோர் திடீர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள். மேலும் 127 பேர் காணாமல் போயுள்ளனர், இவர்களில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்ட செபு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த புயல் புதன்கிழமை தீவுக் குழுமத்தை கடந்து தென் சீனக் கடலுக்குச் சென்றது.
இந்த புயல் சுமார் 20 லட்சம் மக்களை பாதித்தது, 5.6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமவாசிகள் இடம்பெயர்ந்தனர், அதில் 4.5 லட்சம் பேர் அவசர தங்குமிடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
மார்கோஸின் அவசர நிலை அறிவிப்பு, பேரிடர் மீட்பு அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அரசு அவசர நிதிகளை விரைவாக வழங்கவும், உணவுப் பொருட்கள் சேமிப்பு மற்றும் விலை ஏற்றத்தைத் தடுக்கவும் முடியும். (ஏபி)
