
புதுடெல்லி, டிசம்பர் 22 (பிடிஐ): பாலிவுட் நடிகர் ஆர். மாதவனின் தனிநபர் (பர்சனாலிட்டி) உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அவரது அனுமதி இன்றி அவரது பெயர் அல்லது படங்களை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதற்கு பல இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாதவனின் உருவம் மற்றும் குரலை தவறாக பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இணையத்தில் வெளியிடப்பட்ட சில ஆட்சேபத்தக்க மற்றும் அசிங்கமான உள்ளடக்கங்களை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
