ஐக்கிய நாடுகள், பிப்ரவரி 5 (பிடிஐ):
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான புதிய சுயாதீன அறிவியல் குழுவில் பணியாற்ற ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பரிந்துரைத்த 40 உலகளாவிய நிபுணர்களில் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
இந்த 40 பேர் கொண்ட பட்டியலை புதன்கிழமை ஐநா பொதுச் சபையின் பரிசீலனைக்காக குட்டெரெஸ் சமர்ப்பித்தார். இந்த குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும்.
ஐஐடி மெட்ராஸ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் பாலராமன் ரவீந்திரன் இதில் இடம்பெற்றுள்ளார்.

